கொழும்பு 

லங்கை சபாநாயருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது 

கடந்த ஜனவரி மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கருத்துச் சுதந்திரத்தை இந்த மசோதா  பறிக்கும் என எதிர்க்கட்சிகளும், சர்வதேச உரிமைகள் அமைப்புகள் குற்றம் சாட்டின.

இந்த சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம்  அதில் திருத்தங்களைக் கொண்டுவரவும் பரிந்துரைத்தும் எந்தவித திருத்தங்களும் செய்யப்படாமல் ஜனவரி 24-ந்தேதி நாடாளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

 இந்த விவகாரத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனே பாரபட்சமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள சபாநாயகர் அபேவர்தனே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வரவேற்றுள்ளார்.  இலங்கை வரலாற்றில் நாடாளுமன்ற சபாநாயகர் ஒருவர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.