சென்னை: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான பலன்கள் வழங்க ரூ.2,446 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான பலன்களை வழங்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கான பலன்களை வழங்க ரூ.2,446 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2024 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்ற 6,867 பயனாளிகள் பயன் அடையும் வகையில், இந்த சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, விடுப்பு ஒப்படைப்பு தொகை, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.