டில்லி

ற்போது புழக்கத்தில் இருந்து வரும் ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து நீக்கி உள்ளது.

பிரதமர் மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவித்தார்.  அதைத் தொடர்ந்து புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த சில வருடங்களாக ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டு கிடைப்பதில்லை என்று கூறப்பட்ட நிலையில் 2000 ரூபாய் நோட்டு படிப்படியாகத் திரும்பப் பெற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டை வைத்திருந்தால் உடனடியாக வங்கியில் சென்று செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.