திருச்செந்தூர்: ரூ.2.09 கோடி ரொக்கம் 2 கிலோ தங்கம் உள்பட திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோடிக்கணக்கில் உண்டியல் வசூலாகி உள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதம் இரண்டு முறை எண்ணப்படும். இந்த மாதம் உண்டியல் எண்ணும் பணி கோவில் வளாகத்தில் உள்ள காவடி மண்டபத்தில் தொடங்கி பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர்(பொறுப்பு) கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதில், சிவகாசி பதினெண் சித்தர் மடம், குருகுல வேதபாடசாலை, உழவாரப் பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். இந்த உண்டியல் எண்ணும் பணியினை அறங்காவல் குழுத் தலைவர் அருள்முருகன் நேரில் பார்வையிட்டார்.

இந்த மாதம் (ஜூலை) உண்டியல் வசூலாக,  ரூ. 3.09 கோடி ரொக்கம், 1900 கிராம் தங்கம், 29,000 கிராம் வெள்ளி, 30,000 கிராம் பித்தளை, 10,000 கிராம் செம்பு, 3,500 கிராம் தகரம் மற்றும் 552 வெளிநாட்டு கரன்சிகளை  பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்!

ஏற்கனவே கடந்த ஜூன் மாத உண்டியல் வசூலாக   ரூ.3,10,40,748 கோடி கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 2,800 கிராமும், வெள்ளி 25,000 கிராமும் , 292 வெளிநாட்டு பணம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.