மும்பை:
பிஎல் தொடரில் பெங்களுரூ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரூ அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது.

145 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பெங்களுரு அணி 19.3 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில், குஜராத் – ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.