ங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியமுக்கு ஜார்ஜ் (வயது 4), சார்லோட் (2) என்று 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 3வது குழந்தைக்கு தாயாக உள்ள கேத் மிடில்டனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு வைக்கப்பட உள்ள பெயர் குறித்து இப்போதே சூதாட்டம் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

சார்லஸ்-டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேத் மிடில்டன், 3-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். இத் தகவலை அரண்மனை நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது..

இந்நிலையில் பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிய நிலையில்,  அவர்களுக்கு என்ன பெயர் வைக்கப்படும் என்று இங்கிலாந்தில்  இப்போதே சூதாட்டம் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதிக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தைக்கு இளவரசர் ஜார்ஜ் எனப் பெயரிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான கேத் மிடில்டனுக்கு 2வதாக  அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு  ‘சார்லட் எலிசபெத் டயானா’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவர் இளவரசி சார்லோட் என அழைக்கப்படுவார் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது 3வதாக கர்ப்பதம் தரித்துள்ள கேத் மிடில்டனுக்கு 3வது குழந்தை பிறக்க உள்ளது.எ பிறக்கப் போகும் 3-வது குழந்தை, இங்கிலாந்து அரியணையில் ஏறும் வாரிசுகளில் 5-வது இடத்தைப் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிறக்கப்போகும் குழந்தைக்கு  மேரி, ஆல்பர்ட், பிலிப், விக்டோரியா போன்ற பாரம்பரிய பெயரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று இங்கிலாந்து அரசு குடும்பத்தினர் நினைப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், வில்லியம்ஸின் மனைவி கேத் மிடில்டன் தம்பதியினர் தங்களது 3வது குழந்தைக்கு தற்போதைய காலத்திற்கு தகுந்தவாறு நவீனமான பெயரை தேர்ந்தெடுக்க ஆசைப்படுவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இதை வைத்து தற்போது இங்கிலாந்தில் சூதாட்டம் சூடு பிடித்து வருகிறது.