உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் கடந்த 24 ஆண்டுகளில் 1500 க்கும் அதிகமான போட்டிகளில் பங்கேற்றுள்ளதாக கூறியுள்ளார்.

41 வயதாகும் தனக்கு கடந்த சில ஆண்டுகளாக போட்டிகளில் முழு உடல் தகுதியுடன் விளையாட முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர் அடுத்த வாரம் லண்டனில் நடைபெறும் போட்டியை அடுத்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

சிறு வயதில் பந்தை எடுத்துப்போடும் சிறுவனாக டென்னிஸ் மைதானத்தில் நுழைந்த நான் டென்னிஸ் விளையாடுவதை நிறுத்தப்போவதில்லை என்றும் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெறப்போவதாக கூறியுள்ள அவர் “டென்னிஸ் தனது முதல் காதல்” என்று பதிவிட்டுள்ளார்.