பாட்னா: பல்வேறு ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் வழக்கில் பெயில் கிடைத்துள்ளது. ஏற்கனவே 3 வழக்கில் அவருக்கு பெயில் கிடைத்துள்ளதால், விரைவில், அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான 1996ஆம் ஆண்டு பீகார் மாநில முதலமைச்சராக இருந்தபோது கால்நடை தீவன ஊழல் செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 4 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு மொத்தமாக சுமார் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஏற்கெனவே மூன்று வழக்குகளில் ஜாமீன் பெற்றுவிட்டார்.

இந்த நிலையில், இச்சூழலில் தும்கா கருவூலத்தில் இருந்து 3.13 கோடி ரூபாய் ஊழல் செய்தது தொடர்பான நான்காவது வழக்கில் ஜாமீன் கோரி லாலு பிரசாத் யாதவ் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் லாலுவுங்ககு இன்று ராஞ்சி நீதிமன்றம்  இன்று ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இதன்மூலம் விரைவில் லாலு பிரசாத் ஒருசில நாட்களில் சிறையில் இருந்து பிணையில் விடுதலையாகலாம் என்று கூறப்படுகிறது.

பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.