ரைசன்:

த்திய பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் சனிடரைசர் திரவத்திலிருந்து மதுபானம் தயாரித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சுல்தான்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போரியா ஜாகிர் கிராமத்தில் வசிக்கும் இந்தல் சிங் ராஜ்புத்.

ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா பரவுவதை தடுக்க உதவும் சானிட்டீசர்களை தயாரிக்க மாநிலத்தில் பல டிஸ்டில்லரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தி, இந்தல் சிங் ராஜ்புத். சானிடைசரில் இருந்து மதுபானம் தயாரித்துள்ளார்.


இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி சூப்பிரண்டு மோனிகா சுக்லா தெரிவிக்கையில், ராஜ்புத் 72 சதவீத ஆல்கஹால் கொண்ட ஒரு சானிட்டீசரில் இருந்து மதுபானம் தயாரித்துள்ளார் என்று கூறியுள்ளனர். இதையடுத்து ராஜ்புத் மீது கலால் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.