சென்னை:  குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசின் உத்தரவை மத்தியஅரசு அதிகாரிகள் மதிக்காதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து அறிவிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

ஆனால், இன்று நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியின்போது,  தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட போதுரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்க மறுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  தமிழக அரசின் உத்தரவை அவர்கள் மதிக்காதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அரசின் உத்தரவை மதிக்காத வங்கி அதிகாரிகள் மீது  என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது தமிழகஅரசு என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடுவது குறித்து தமிழக அரசு புதிய உத்தரவு