கர்நாடகா:
டிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான புஷ்பா படத்தின் பாணியில் ஒருவர் ரூ.2.50 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் புஷ்பா திரைப்படத்தில் பால் லாரி டேங்கை 2 பாகங்களாக பிரித்து, மேல் பக்கத்தில் பாலையும், அடியில் செஞ்சந்தன கட்டைகளையும் அல்லு அர்ஜுன் கடத்துவார். அதே பாணியில் யாசின் செம்மரக் கட்டைகளை அடியிலும் அதற்கு மேல், காய்கறி பழங்கள் பெட்டிகளையும் வைத்து கட்டைகளை கடத்தியுள்ளார்.

ஹைலைட்டாக, கொரோனா அத்தியாவசிய பொருட்கள் அவசரம் என்ற ஸ்டிக்கரையும் அவர் லாரியின் முகப்பில் ஒட்டியுள்ளார். இந்த லாரி மகாராஷ்டிராவின் சங்கிலி மாவட்டம் மீரஜ்நகர் காந்தி சவுக் அருகே வந்தபோது, போலீசார் சோதனையிட்டனர். லாரி சந்தேகப்படும்படி இருந்ததால் கூடுதல் சோதனை நடத்திய போலீசார் புஷ்பா யாசினை கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையில் லாரியில் கொண்டுவரப்பட்ட கட்டைகளின் மதிப்பு ரூ. 2.45 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது.