சென்னை: காணாமல் போன கோயில் சிலைகள், நகைகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுங்கள் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழக அறநிலையத்துறை  ட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகள், நகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு காணாமல் போயுள்ளதாகவும், கோயில் சிலைகள், நகைகள் காணாமல் போயுள்ளதாகவும் கூறி வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது.

விசாரணையின்போது,மனுதாரரான வழக்கறிஞர்  வெங்கட்ராமன், சிலைக்கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும், கடந்த ஆட்சியில் இந்த வழக்கில் அறநிலையத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், சிலைகள், நகைகள் காணாமல் போகவில்லை எனக்கூறி, திருட்டுகள் மறைக்கப்பட்டு உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும்,  தற்போது  ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால்ர, காணாமல் போன  ஆவணங்கள், சிலைகள், நகைகள் மாயம் குறித்து மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தவர், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறினார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  சிலைகள், நகைகள் எங்கிருந்து காணாமல் போயின என்பதைக் கண்டறிய வேண்டும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் தடுக்கும் வகையில் திட்டம் வகுக்கவும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியதுடன், கந்த  ஆட்சியின்போது தாக்கல் செய்யப்பட்ட  பதில் மனுவில் எடுத்துள்ள நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டு. புராதன கோயில்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், காணாமல் போன சிலைகள், நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு  அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தி வழக்கை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.