மனிதர்களை கடத்தும் செயல் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக சமீபத்தில் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

children

ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ”மனித கடத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகள் தங்களது தேவைகளுக்காக பெண்களையும், குழந்தைகளையும் கடத்தப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, உடல் உறுப்புகளை திருடுவதற்காகவும் மனித கடத்தல் நடைபெறுகிறது.

கடத்தபப்ட்டவர்களில் 70சதவிகித்தினர் பெண்களாகவே உள்ளனர். அவர்கள் பாலியல் துன்புறுத்தல், வேலை மற்றும் பிச்சை எடுப்பதற்காக வற்புறுத்தப்பட்டுள்ளனர் “ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித கடத்தல் தொடர்பாக 2003ம் ஆண்டும் முதல் 2016ம் ஆண்டு வரை 2லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் ஐக்கிய நாடுகள் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த கடத்தல் சம்பவங்கள் நடவடிக்கை எடுக்க்காத நாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதன்படி கடந்த 7 ஆண்டுகளில் ஆட்கடத்தல் அதிகரித்து வந்த நிலையில் 13 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய கடத்தல் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் கடந்த ஆண்டு மனித உரிமை மீறல் தடுப்புச் சட்டம் பாகிஸ்தானில் நடைபெற்றது.

இதன் மூலம் கடத்தல் சம்பங்களை குறைக்க முடியும் எனவும், அவர்களை பாதுகாக்க முடியும் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவித்துள்ளது.