சென்னை:
மிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுத திமுக எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளார்.

ஆளுநர் உரையில் தமிழ்நாடு என்ற சொல்லை உச்சரிக்காமல் தவிர்த்ததை தொடர்ந்து, பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு பெயர் மற்றும் இலச்சினை இடம் பெறாததற்கு கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதவும் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்.பி.க்கள் திரவுபதி முர்முமை சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.