பெங்களூரு

ய்வுக்காக நிலவின் தென் துருவப் பகுதியைத் தேர்வு செய்தது குறித்து இஸ்ரோ தலைவர் விளக்கம் அளித்துள்ளார்

கடந்த ஜூலை 14 ஆம் தேதி அன்று நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காகச் சந்திரயான்-3 விண்கலம் பூமியில் இருந்து அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர்  நேற்று மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்குவதில் வெற்றியடைந்தது.

நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் இஸ்ரோவுக்கு தனது முதல் தகவலை அனுப்பியது. அதில், இந்தியா, இலக்கை நான் அடைந்து விட்டேன். நீங்களும் கூட! என்று தெரிவித்தது.

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய தேர்ந்தெடுத்தது ஏன்? என்பது பற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று விளக்கமளித்து உள்ளார்.

அவர் இன்று

“சந்திரயான்-2 உதவியுடன் நிலவில் இருந்து எங்களால் எதனையும் பெற முடியவி,ல்லை என்பதால் இந்த திட்டத்திற்காக ஒவ்வொன்றையும் புதிதாகச் செய்ய வேண்டியிருந்தது.  இதில் முதல் ஆண்டில் சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை கண்டறிய நேரம் செலவிட்டு அடுத்த ஆண்டு ஒவ்வொரு விசயமும் அலசி ஆய்வு செய்யப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றால் எங்களுடைய திட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆயினும், தொடர்ந்து நாங்கள் சில ராக்கெட்டுகளை செலுத்தி வந்தோம்.  எங்கள் பணிகொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் மீண்டும் தொடர்ந்தது.

 இந்த சந்திரயான்-3 ன் ஒட்டு மொத்த திட்டமும் நிலவின் தென்துருவம் அல்லது அதன் அருகே தரையிறங்குவது ஆகும். தென்துருவத்தில் அறிவியல் சார்ந்த விசயங்களுக்கான சாத்தியங்கள் பெரிய அளவில் உள்ளன. இவை நிலவில் நீர் மற்றும் தாதுப்பொருட்கள் இருப்பதற்கான சாத்தியங்களுடன் அவை தொடர்புடையவை.

மேலும் பிற விஷயங்களையும் ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் விரும்புகிறார்கள்.  எனவே அந்த பகுதிகளில் ஆய்வு செய்வது எனத் தீர்மானித்தோம்,”

 என்று விளக்கம் அளித்துள்ளார்.