ண்டன்

ங்கிலாந்து அரசர் சார்லஸ் ஒரே ஆண்டில் இருமுறை தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் பழக்கத்தை கொண்டுள்ளார்.

இங்கிலாந்து அரசி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து கடந்த மே 6-ந்தேதி மன்னர் 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழா நடைபெற்றது.  நேற்று அவரது 74-வது பிறந்தாள் விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மன்னர் சார்லஸ் நவம்பர் மாதம் 14-ந்தேதி பிறந்தும் தனது பிறந்தநாளை ஜூன் மாதம் கொண்டாடியதற்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடும் குளிர் நிலவும் என்பதால், அந்த மாதங்களில் பிறந்த இங்கிலாந்து மன்னர்கள் அரண்மனைக்கு உள்ளேயே அரச குடும்பத்தினருடன் தனிப்பட்ட முறையில் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர்.  பிறகு கோடைக்காலமான ஜூன் மாதத்தில் 2-வது முறையாக தங்கள் பிறந்தநாளை நாட்டு மக்களோடு சேர்ந்து பிரம்மாண்டமான முறையில் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வகையில் நேற்று மன்னர் சார்லஸின் பிறந்தநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இது சார்லஸ் மன்னராக முடிசூட்டிய பின் கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்பதால், பிரிட்டன் அரச வம்சத்தைச் சேர்ந்த 1,400 வீரர்கள், 400-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட அணிவகுப்போடு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வரும் நவம்பர் மாதம் மன்னர் சார்லஸ் தனது 74-வது பிறந்தநாளை மீண்டும் ஒருமுறை கொண்டாட இருப்பது குறிப்பிடத்தக்கது.