சென்னை: முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான தடுப்பூசி முகாiமை விருகம்பாக்கத்தில் துவக்கிவைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக தமிழ்நாடு அரசு உள்ளது என்று கூறினார்,.
சென்னையயில் முடி திருத்துபவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியம் நேற்று துவக்கி வைத்தார். அப்போது அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக, வணிகர் சங்க பேரமைப்பு விக்கிரமராஜாவின் மகனும் சட்டமன்ற உறுப்பினருமான பிரபாகர் ராஜா உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
டெல்லி பயணத்தின் போது, தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான விழிப்புணர்வு மிக சிறப்பாக நடைபெற்றது வருகிறது என பிரதமர் பாராட்டியதாகவும், தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி தாராளமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் வைத்ததாக கூறியவர். செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையம் துவங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலிப்போம் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்ததாக கூறினார். தமிழகத்தில் புதிதாக அமைய உள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் 1,600 இடங்களுக்கான சேர்க்கையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்திற்கு இதுவரை 1.77 கோடி தடுப்பூசிகள் கிடைத்துள்ளது. தற்போது (16ந்தேதி காலை நிலவவரம்) 7,77,910 தடுப்பூசுகள் கையிருப்பு உள்ளது. கரும்பூஞ்சை நோய் தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா 3ம் அலையை பொறுத்தவரை இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 3ம் அலையில் இறப்பு பொறுத்தவரை அங்கு குறைவாகவே உள்ளது. அங்கு அவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் இறப்பு குறைந்துள்ளது.
கொரோனா3வதுஅலையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் 7ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் மட்டும் 500 படுக்கைகள் உள்ளதாகவும் கூறியவர், நாம் தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொள்ள வேண்டும். 3ம் அலையை எதிர்கொள்ள தமிழகத்தில் அனைத்து கட்டமைப்புகளும் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.