டெல்லி: லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி உள்ளதாவது:  அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று பலர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வரப்பெற்றுள்ளன.

அங்கீகாரமற்ற லோன் ஆப் மூலமாக அல்லது ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது. அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.