சென்னை :  வார விடுமுறை மற்றும் ரமலான் பண்டிகையையொட்டி,  சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சனி, ஞாயிறு வார விடுமுறையுடன், திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகையும் வருவதால், அன்றைய தினமும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், சென்னை உள்பட நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரமலா ன் விடுமுறையையொட்டி,   சென்னை உட்பட பல்​வேறு இடங்​களில் இருந்து வரும் 28-ம் தேதி முதல் 31 வரை போதிய அளவில் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன.

அதன்​படி, சென்னை கிளாம்​பாக்​கத்​தில் இருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, துாத்​துக்​குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு வரும் 28-ம் தேதி 460 சிறப்பு பேருந்துகளும், 29-ம் தேதி 530 சிறப்பு பேருந்​துகளும் என மொத்​தம் 990 பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன.

இதே​போல, வரும் 31-ம் தேதி சென்​னைக்​கும் இதர ஊர்​களுக்கு 890 சிறப்பு பேருந்​துகள்இயக்க திட்​ட​மிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்​பேட்​டில் இருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர். பெங்​களூருக்கு வரும் 28-ல் 100 சிறப்பு பேருந்​துகளும், வரும் 29-ல் 95 சிறப்பு பேருந்​துகளும் இயக்​கப்பட உள்​ளன.

மாதவரத்​தில் இருந்து வரும் 28 மற்​றும் 29-ம் தேதி​களில் தலா 20 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும். 31-ம் தேதி சொந்த ஊர்​களில் இருந்து திரும்ப வசதி​யாக அனைத்து இடங்​களில் இருந்​தும் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும் .

இவ்வாறு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.