டில்லி

சி பி ஐ சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தானா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராகேஷ் அஸ்தானா குஜராத் பிரிவை சேர்ந்த ஐ பி எஸ் அதிகாரி ஆவார். 1984 ஆம் ஆண்டு இவர் ஐ பி எஸ் தேர்வில் வெற்றி பெற்றார்.  ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு, விஜய் மல்லையாவின் வங்கி மோசடி வழக்கு போன்ற பிரபல வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக்கு குழுவுக்கு தலைமை வகித்து வருகிறார்.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை உள்ளிட்ட அமைச்சரவைக் குழு சி பி ஐ கூடுதல் இயக்குனராக பணியாற்றும் ராகேஷ் ஆஸ்தானாவை சி பி ஐ சிறப்பு இயக்குனராக நியமனம் செய்ய தனது ஒப்புதலை அளித்துள்ளது.   ராஜேஷ் அஸ்தானா மீது ஒரு ஊழல் வழக்கு உள்ளது.   அதனால் ஏற்கனவே அவருக்கு பதிவு உயர்வு அளிக்க வேண்டாம் என ஊழல் கண்காணிப்பு ஆணையம் அரசுக்கு சொல்லி இருந்தது.   ஆனால் அதை கவனியாமல் அரசு அவருக்கு பதவி உயர்வு அளித்துள்ளது.

கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ள இந்த விவகாரத்தைப் பற்றி நேற்று செய்தியாளர்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிடம் சரமாரியாக கேள்விக்கணைகள் தொடுத்தனர்.   ஆனால் அவர் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.