சென்னை

ளுநர் மாளிகை தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

நேற்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரென பெட்ரோல் குண்டு வீசினார். அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கி பிடித்தனர்.

அந்த நபரிடம் நடந்த விசாரணையில், அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஒப்புதல் தராததால் பெட்ரோல் குண்டு வீசியதாகத் தெரிவித்துள்ளார்.

குண்டு வீச்சு குறித்துக் கருக்கா வினோத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த முதல் தகவலறிக்கை. பதிவில், பெட்ரோல் குண்டு அதிக சத்தத்துடன் வெடித்தது என்றும் அரசு அலுவலகம் மீது குண்டு வீசுதல், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவாகி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

குண்டு வீசிய வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சென்னை ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவுசெய்யவில்லை. .மாறாக தன்னிச்சையாகப் பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலைச் சாதாரண நாசக்கார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது.  

காவல்துறையினரால் அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு நீதிபதியை நள்ளிரவில் எழுப்பி குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. 

அதாவது நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்பட்டுள்ளது.” 

என்று கூறப்பட்டுள்ளது.