துபாய்: 
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக எவின் லூயிஸ் 58 ரன்கள் அடித்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணியின் பந்து  வீச்சாளர்களில் ஹர்ஷல் படேல் மூன்று விக்கெட்களையும், யுஸ்வேந்திர சாஹல், ஷாபாஸ் அகமது ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.  ஜார்ஜ் கார்டன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
149 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த வெற்றி மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி, 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சாளர்களில் முஸ்தபிசுர் ரஹ்மான்ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரில் ஷார்ஜாவில் நாளை நடக்க உள்ள போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ளது.