’கொரோனாவுக்கு ஆல்கஹால் ’’   எம்.எல்.ஏ.வின் கண்டுபிடிப்பு

ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள சங்கோட் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர், பாரத் சிங் குண்டன்பூர்.
இவர், சரக்கு பிரியர்களின் ஆபத்பாந்தவன் என்று தெரிகிறது.
எப்படி?
’மாநிலம் முழுவதும் ஊரடங்கால் மூடப்பட்டுள்ள மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும்‘’என்று ராஜஸ்தான் மாநில முதல்-அமைச்சர் அசோக்கெலாட்டுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
‘ ஆல்கஹாலை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் சானிடைசர், கொரோனை கொல்லும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். சானிடைசர் , கொரோனாவை கொல்லும் போது,  குடிமகன்களின் உடம்பில் இருக்கும் கொரோனா வைரசையும் ஆல்கஹால் கொல்லும். எனவே மதுக்கடைகளை திறக்க வேண்டும்’’ என்பது எம்.எல்.ஏ. பாரத் சிங்கின் வாதம்.
’’ கள்ளச்சாராயம் குடிப்பதால், குடிமகன்கள் இறந்து போகிறார்கள். மதுக்கடைகளை திறப்பதன் மூலம் குடிமகன்கள் உயிரை காப்பதோடு, நெருக்கடியான இந்த நேரத்தில் அரசுக்கும் வருவாய் கிடைக்கும்’’ என்று முதல்வருக்கு யோசனை கூறியுள்ளார், அந்த சட்டமன்ற உறுப்பினர்.
–  ஏழுமலை வெங்கடேசன்