மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பெளலிங் செய்ய முடிவெடுத்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. பஞ்சாப் அணியின் கேப்டனாக இருப்பவர் கேஎல்.ராகுல். ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பவர் சஞ்சு சாம்சன்.

பஞ்சாப் அணியில், இன்றையப் போட்டியில் கிறிஸ் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரானும் இடம்பெற்றுள்ளார் அந்த அணியில். அவர் கடந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டார். கடந்த ஐபிஎல் தொடரில், சற்று தாமதமாகவே அணியில் வாய்ப்பு பெற்ற கெய்ல், இந்தமுறை முதல் போட்டியிலேயே வாய்ப்பை பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை, இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ராஜஸ்தான் அணி, கடந்த தொடரில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கடைசி இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.