சிங்கப்பூர்: இலங்கையில் இருந்து தப்பி ஓடி, மாலத்தீவில் தஞ்சமடைந்த முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். இந்த நிலையில், சிங்கப்பூரில் மக்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால், அவர் வேறு நாட்டுக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதாரத்தை சீரழித்த ராஜபக்சேக்கள் குடும்பதுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம்,  உச்சமடைந்த நிலையில் இலங்கை அதிபர்,  கோத்தபய ராஜபக்சே, கடந்த 13ந்தேதி தனது மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பியோடினார். அங்கிருந்தபடியே  தனது பதவியை ராஜினாமா செய்தார்.  ஆனால் அங்கு   அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசு அதிகாரிகள், பொதுமக்கள், அங்கு வாழும் இலங்கை மக்கள் என பல தரப்பினரும் அவருக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர். , மாலத்தீவு அதிபர் மாளிகைக்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கிருக்கும் அரசியல் தலைவர்களும் கோத்தபயவை அனுமதித்தற்காக மாலத்தீவு அதிபருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தனர்.

இதனால், கோத்தபய அங்கிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் ஜெட் விமானம் மூலத் மாலத்தீவில் இருந்து புறப்பட்ட கோத்தபய,  கடந்த வியாழக்கிழமை மாலை சிங்கப்பூர்  சென்றடைந்தார். கோத்தபய ராஜபக்சேயை அனுமதித்ததற்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு நெருப்பு கொழுந்துவிடத் தொடங்கியுள்ளது. அவரது வருகைக்கு எதிராக ஓர் ஆன்லைன் மனுவை உருவாக்கியுள்ள தொழிலதிபர் ரேமண்ட், கோத்தபய மீது சிங்கப்பூர் போலீசில் பணமோசடி புகாரும் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். அவரது ஆன்லைன் மனுவுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கோத்தபயவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபு ராமச்சந்திரன் என்பவரின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் உள்ள பூங்கா ஒன்றில் கடந்த சனிக்கிழமை அமைதி

இதையடுத்து சிங்கப்பூர் அரசு விளக்கம் அளித்தது. அதில், “கோத்தபய எங்களிடம் தஞ்சமடையவில்லை… தனிப்பட்ட பயணம் மட்டுமே!” என கூறியது. மேலும்,  கோத்தபய வருகைக்கு எதிராக, சட்டத்தை மீறி யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று சிங்கப்பூர் போலீஸ் எச்சரித்துள்ளது. அதேவேளையில், தனிப்பட்ட பயணத்தை விரைவாக முடித்துக்கொண்டு கிளம்புமாறு கோத்தபயவை சிங்கப்பூர் அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், எங்கு செல்வது என தெரியாமல் கோத்தபய ராஜபக்சே திக்குமுக்காடி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கோத்தபய ராஜபக்சேவுக்கு உலக நாடுகள் தஞ்சம் கொடுக்கக்கூடாது, கோலாலம்பூர், லண்டன் மற்றும் நியுயோர்க், ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள்  நடத்தப்பட்டுள்ளன.