டில்லி

காங்கிரஸில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த பெருமையைக் கொண்டவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. ராஜாஜி எனக் கட்சியினரால் அழைக்கப்பட்ட இவருடைய கொள் பேரன் சி.ஆர். கேசவன் ஆவார்.

கேசவன் கடந்த 2001-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி மையத்தின் துணை தலைவர் (ஒரு மாநில அமைச்சருக்கு இணையானது) என்ற பதவியை வகித்த அனுபவம் கொண்டவர்.

பிரசார் பாரதி வாரியத்தின் உறுப்பினர், இந்திய இளைஞர் காங்கிரசின் தேசிய கவுன்சில் உறுப்பினர் மற்றும் தேசிய ஊடக குழு உறுப்பினர் என எண்ணற்ற பதவிகளை வகித்திருக்கிறார். 2 தசாப்தங்களாக காங்கிரசில் இருந்து பணியாற்றிய அவர், கடந்த ஆண்டு ஏப்ரலில் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.’

கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த சி.ஆர். கேசவன்  தற்போது அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  விரைவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அக்கட்சியின் முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.