சென்னை

டுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

அதாவது வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை , தருமபுரி , திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி , ஈரோடு , கரூர் , சேலம், நாமக்கல் , நெல்லை ,விழுப்புரம் , கடலூர் , பெரம்பலூர் , அரியலூர், புதுக்கோட்டை , நீலகிரி , கோவை , திருப்பூர் , தேனி , திண்டுக்கல் , மதுரை, விருதுநகர் , தென்காசி , தூத்துக்குடி , கன்னியாகுமரி , ராமநாதபுரம் , திருவள்ளூர் , மயிலாடுதுறை,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது”

எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .