சென்னை

சென்னை வானிலை மையம் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில்,

”அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 27  மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.

அதாவது சென்னை, நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.