சென்னை

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாக வரும் 3 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் நேற்று வானிலை மையம் தெரிவித்தது. சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலையில் தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டியது.

சென்னை, ராதாகிருஷ்ணன் சாலை, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுதாங்கல் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது .

சென்னையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர்.