நியூயார்க்

னமழை மற்றும் வெள்ளம் காரணமாக நியூயார்க்கில் விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

 அமெரிக்காவின்  நியூயார்க் நகரில் இடைவிடாமல் மழை பெய்து  வருகிறது.  கனமழையால் வெள்ளம்  ஏற்பட்டு நகரின் பல பகுதிகள் நீரில் முழுகி உள்ளன. இதனால் நகரமே முடங்கிப் போன நிலையில் வெள்ள நீர் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தையும் சூழ்ந்தது.

எனவே பாதுகாப்பு கருதி விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.  மேலும் ரயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் வெள்ளம் புகுந்ததால் சுரங்கப்பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.  இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

நகரில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  பல இடங்களில் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு வரிசையாக நின்ற வண்ணம் உள்ளன.  இந்த கனமழை மற்றும் வெள்ளத்தினால் பொதுமக்களில் பலர் வீட்டைவிட்டு வெளியேறாமல் உள்ளனர்.