Skip to content
  • Sun. Jul 12th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

‘கியூ-ஆர்’ கோடை பயன்படுத்தி பிளாட்பாரம் டிக்கெட்! பெங்களூரில் அறிமுகம்…

Sep 30, 2020

பெங்களூரு: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ‘கியூ-ஆர்’ கோடை பயன்படுத்தி பிளாட்பாரம் (நடைமேடை)  டிக்கெட் எடுக்கும் வசதி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பரவி வரும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், மாநில அரசு அறிவித்துள்ள தளர்வுகள் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.  இதற்கிடையில், பொதுமக்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், முக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கூடுவதை தடுக்க தென்மேற்கு ரெயில்வேயும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ரயில்நிலையங்களில், வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளை வழியனுப்ப வரும் உறவினர்கள் கூட்டத்தை தடுக்க பிளாட்பாரம் டிக்கெட்டை ரூ.50 ஆக உயர்த்தி உள்ளது. மேலும்,  கூட்ட நெரிசலில் நின்று நடைமேடை (பிளாட்பாரம்)  டிக்கெட் எடுப்பதை தவிர்க்க, இந்திய ரெயில் நிலைய வளர்ச்சி கழகம் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி ‘கியூ-ஆர்’ கோடை பயன்படுத்தி நடைமேடை டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் நுழைவுவாயில் பகுதியில் 2 கியாஸ்க்  எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளது. அந்த எந்திரங்களில் ‘கியூ-ஆர்’ கோடு லேபிள் ஒட்டப்பட்டு உள்ளது.

பிளாட்பாரம் டிக்கெட் தேவைப்படுபவர்கள்,  கியூ- ஆர் கோடை ஸ்கேன் செய்து, பிளாட் பாரம் டிக்கெட் எடுக்கலாம்.

அதாவது ‘போன் பே’, ‘கூகுள் பே’, ‘பேடிஎம்’ உள்ளிட்ட செல்போன் செயலிகள் மூலம் தானியங்கி எந்திரங்களில் உள்ள ‘கியூ-ஆர்’ கோடை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தி நடைமேடை டிக்கெட்டை எடுத்து கொள்ளலாம்.

Post navigation

ஐக்கிய அரபு எமிரேட்டின் கோவிட் -19 தடுப்பு மருந்து பாதுகாப்பானது: ஆய்வு முடிவுகள்
மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: மேலும் 327 காவலர்களுக்கு பாதிப்பு

Related Post

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

இந்தியா

மே 9-ல் மேற்கு வங்கம், மே 12-ம் தேதி அசாம் மாநிலங்களில் பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழா:

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer