டெல்லி
கும்பமேளாவுக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில் வே அமைசர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் இருந்து பிரயாக்ராஜில் நடக்கும் கும்ப மேளாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் சென்று வருகிறார்கள். இக்கு இதுவரை சுமார் 53 கோடி பேர் அங்கு புனித நீராடி உள்ளனர். நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
புதுடெல்லி ரயில்நிலையத்தில் கடந்த 15-ந் தேதி அளவுக்கதிகமான கூட்டத்தால் 18 பேர் பலியாகி விட்ட சம்பவம் காரணமாக புதுடெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் மட்டுமின்றி மத்திய ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்,
, “டெல்லி ரயில் நிலையம் தேசிய பேரிடர் மீட்பு படை கட்டுப்பாட்டில் உள்ளது. கூடுதல் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். கும்ப மேளா கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புதுடெல்லி, பாட்னா, சூரத், பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட 60 ரெயில் நிலையங்கள் அதிக மக்கள் கூடும் ரெயில் நிலையங்களாக கண்டறியப்பட்டுள்ளன. எனவே, தாங்கள் பயணிக்கும் ரெயில் புறப்படும் நேரத்தையொட்டி பயணிகளை நடைமேடைக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே நேரத்தில் அதிக பயணிகள் நடைமேடைகளில் கூடுவதை தவிர்க்க முடியும்.
பிரயாக்ராஜ் ரெயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு கூட்ட நெரிசலை தடுப்பது எளிதாகி உள்ளது. இதுதவிர, பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் பயணிகள் கூட்டத்தை மேலாண்மை செய்ய நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஒரே மாதிரியான பிரத்யேக வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட உள்ளன.
அதேபோல் ரெயில் நிலைய நடைமேம்பாலங்களில் உள்ள படிகட்டுகளில் அமருவதை தடுக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இதனால் வருங்காலத்தில் புது டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்டதைபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க முடியும்.
புதுடெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தற்போது வரை எந்தவொரு அதிகாரியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இரு நபர் குழுவின் அறிக்கைக்கு பிறகே அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்”
என்று அறிவித்துள்ளார்.