கும்லா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ளார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

வரும் 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் தங்களது கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரை ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ மேற்கொண்டு வருகிறார். ராகுல் காந்தி தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில் கும்லா மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது,

“இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சியினரைப் போலவே, மம்தா பானர்ஜியும் மிக முக்கியமான அங்கமாக இருக்கிறார். தொகுதிப் பங்கீடு தொடர்பாகக் கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன

”நிதிஷ் குமார் வெளியேறியதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் யூகிக்க முடியும். பீகாரில் இந்தியா கூட்டணி ஒன்றாக இணைந்து போராடுவோம்”

என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.