டில்லி

ன்று டில்லி நீதிமன்றத்தில் பாலியல் புகாரில் தொடர்புள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் ஆஜரானார் 

அகில இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் பிரிஜ் பூஷண் தலைவர் பதவியில் இருந்து விலகினார். டில்லியில் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பிரிஜ் பூஷண் ஆதரவாளரும், உத்தரப்பிரதேச மல்யுத்த சங்க துணைத் தலைவருமான சஞ்சய் சிங் வெற்றி பெற்று புதிய தலைவரானார்.

பிரிஜ் பூஷண் மீதான வழக்கு விசாரணை டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கு தொடர்பாக பிரிஜ் பூஷண் மீது டில்லி காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இன்று மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்காக பிரிஜ் பூஷண் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.