டெல்லி: தலைநகர் டெல்லியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த சிறுமியின் ஏழைப்பெற்றோரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

டெல்லியின் பழைய நங்கால் பகுதியில் வசித்து வந்த ஏழை தம்பதியின் 9வயது சிறுமியை ஒரு கும்பல்  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். பின்னர், அந்த சிறுமியின் உடல் பெற்றோரின் அனுமதியின்றி  தகனம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  உயிரிழந்த சிறுமிக்கு  நீதி கிடைக்க வேண்டும் என பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர், ராகுல்காந்தி இன்று திடீரென சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தகுறித்து செய்தியாளார்களிடம் கூறிய ராகுல், “பெற்றோரின் கண்ணீர் ஒரே ஒரு விஷயத்தைச் சொல்கிறது- அவரது மகள், நாட்டின் மகள். இந்த நீதியின் பாதையில் நான் அவர்களுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.