புதுடெல்லி:
லைஞரின் நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உயிரிழந்தார். அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் தமிழக மக்களால் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு காலை முதலே தி.மு.கவைச் சேர்ந்தவர்களும் அரசியல் கட்சியினரும் அவரது நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கலைஞரின் நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், கலைஞர் கருணாநிதி நமக்கு வழிகாட்டியாக இருப்பார் என்றும், பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை சமூகநீதி மூலம் மாற்றிய புரட்சியாளர் கருணாநிதி என்றும், நவீன தமிழ்நாட்டை உருவாக்குவதில் கருணாநிதியின் பங்களிப்பை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று  குறிப்பிட்டுள்ளார்.