டில்லி

செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐரோப்பாவுக்கு  செல்கிறார்.

 

அடுத்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஐரோப்பிய நாடுகளுக்குப் புறப்பட்டு செல்கிறார். அவர் 5 நாட்கள் பயணமாக அவர் செல்வதாகக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராகுல் காந்தி முதலில், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்கு சென்று அங்கு 7-ந் தேதி ஐரோப்பிய ஆணைய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசுகிறார்.  அடுத்த நாள் (8-ந் தேதி) பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்று அங்கு ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசுகிறார்.

பிறகு 9-ந் தேதி, பாரீஸ் நகரில் நடக்கும் பிரான்ஸ் தொழிலாளர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பின்னர், நார்வே நாட்டின் ஆஸ்லோ நகருக்கு ராகுல்காந்தி செல்கிறார். அவர் அங்கு 10-ந் தேதி, இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அவர் இந்திய வம்சாவளி பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுவதுடன் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

இந்தியா இந்த ஆண்டு ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. டில்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ந் தேதிகளில் ஜி-20 மாநாட்டை நடத்துகிறது.  ஜி 20 மாநாடு நடக்கும் நேரத்தில், ராகுல்காந்தி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.