ஜெய்ப்பூர்

பிரதமர் மோடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அஞ்சுவது ஏன் என்று ராகுல் காந்தி வினா எழுப்பியுள்ளார்.

நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்வில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டனர். அப்போது ராகுல் காந்தி, மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

ராகுல் காந்தி,

”பாரதம் என இந்தியாவின் பெயரை மாற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்குப் பதிலாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இன்று கூட மகளிர் இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் அமல்படுத்தலாம். அரசு தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட அரசு விரும்புகிறது. 

தற்போதே இந்த ஒதுக்கீட்டை அமல்படுத்தக் காங்கிரஸ் விரும்புகிறது. அதில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரையும் சேர்க்க வலியுறுத்துகிறது. மத்திய அரசு 10 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட்டு உள்ளது.  நாள் முழுவதும் பிரதமர் இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்து. அவர்களை மதிப்பது பற்றிப் பேசுகிறார். ஆனால் ஏன் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிரதமர் அஞ்சுகிறார்? 

அடுத்த உரையில் பிரதமர் சாதிவாரி கணக்கெடுப்பைக் காங்கிரஸ் நடத்தியது என்பதை இந்தியாவுக்குச் சொல்லட்டும். அவர்களிடம் புள்ளிவிவரங்கள் உள்ளன. மக்களுக்கு அதைக் காட்டட்டும். சாதி அடிப்படையில் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அவமதித்து அவர்களை ஏமாற்றாதீர்கள்.

நான் நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை எழுப்பியதும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனது குரலை ஒடுக்கப் பார்க்கின்றனர். பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவு குறித்துக் கேட்டால், அவர்கள் நழுவி விடுவார்கள்.”

என்று உரையாற்றி உள்ளார்.