புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாகக் கேரளா செல்ல உள்ளதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 16-ஆம் தேதி கேரளா செல்லும் ராகுல் காந்தி, மானந்தவாடி காந்தி பூங்காவில் மகாத்மா காந்தியின் சிலையைத் திறந்து வைக்கிறார், அதைத் தொடர்ந்து இரண்டு குடிநீர் திட்டங்களையும் அவர் துவக்கி வைக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், வரும் 17ஆம் தேதி கல்பேட்டா மாவட்ட ஆட்சியரைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசுவார் என்றும், அதைத் தொடர்ந்து கரசேரி பஞ்சாயத்து விவசாயிகள் தின திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பிறகு, அவர் மலப்புரத்தில் உள்ள வண்டூரில் உள்ள காந்தி பவன் ஸ்நேகராமம் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுடன் மதிய உணவு சாப்பிடுவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.