கொல்லம்: கேரளாவில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, கொல்லம் கடலில் மீனவர்களுடன் கடலுக்குள் சென்றார். அப்போது மீனவருடன் கடலுக்குள் குதித்து நீந்தினார்.

கேரளாவில் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல்காந்தி இன்று    கொல்லம்  தங்கசேரி கடற்கரை பகுதியில் மீனவர்களுடன் உரையாடினார். அதைத் தொடர்ந்து அங்குள்ள மீனவர்களுடன்  சேர்ந்து கடலுக்குள் சென்று   மீனவர்களுடன் சேர்ந்து வலையை கடலுக்குள் வீசியும், வலையை இழுத்தும் மீனவர்களின் மீன்பிடிக்கும் தொழிலையும் அவர்களின் கஷ்டத்தையும்  தொழிலை புரிந்துகொண்டார்.

கடலுக்குள் மீனவர்களுடனி  போட்டில் சென்ற  ராகுல்காந்தி, மீனவர் ஒருவருடன் கடலுக்குள் குதித்து நீந்தினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோ உதவி: மலையாள மனோரமா