சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய ராகுல்காந்தி இருப்பதாகவும், முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து நெல்லை,கோவையில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 12ந்தேதி ராகுலின்  தமிழக தேர்தல் பிரசார  சுற்றுப்பணம் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும்.  இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பை  மார்ச் 16ந்தேதி மாலை  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி,, மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெறுகிறது.  2-ம் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 26-ம் தேதியும்,  3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெறும் என்றும்  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில்  முற்கட்ட  பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் முடிந்து  அனல் பறக்கும்  பிரசாரம் நடைபெற்று வருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள், பிரசார பீரங்கிகள், எதிர்க்கட்சி தலைவர்கள்,  அரசியல் கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் இந்த முறையும் 39 தொகுதிகளையும் கைப்பற்றும் நோக்கில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.  தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி.  தமிழகத்தில் 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்,   ஏப்.12ல் ராகுல்காந்தி  தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து, நெல்லை, கோவை உள்பட சில இடங்களில்  கூட்டணி  வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.