டில்லி

பொதுமக்களின் வலியை பாஜகவால் உணர முடியாது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,

”பிரதமர் மோடிக்கும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர் அனைவருக்கும் பிரதமர் இல்லை,  அவர் ஒரு சிலருக்கு மட்டுமே பிரதமர்,

நமது நாட்டின் பிரதமர் ஏன் மணிப்பூருக்குச் சென்று அதைப் பற்றிப் பேசவில்லை என்று நீங்கள்  ஆச்சரியப்படுவீர்கள். நம்மால் இந்தியர்கள் காயப்படும்போதெல்லாம், அவர்களின் வலியை உணர முடியும் பாஜகவினரும், ஆர்.எஸ்.எஸ் ஸும்  அந்த வலியை உணரமாட்டார்கள்.

பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் பதவியை பெறுவதற்கு எது வேண்டுமானாலும் செய்யும். அவர்கள் பதவிக்காக மணிப்பூரை மட்டுமல்ல, இந்த உலகத்தையும் அழிப்பார்கள். அவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள துயரம் மற்றும் வலியைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை”

என்று கூறி உள்ளார்.