மோடி குடும்ப பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்கியதோடு மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசமும் அளித்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை காரணம்காட்டி ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து மக்களவை செயலகம் தகுதிநீக்கம் செய்தது.

ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய இன்று குஜராத் வந்தார் ராகுல் காந்தி.

இந்த மனு மீது சூரத் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் ராகுல் காந்தியின் ஜாமீனை ஏப்ரல் 14 வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிமன்றம்

இது தொடர்பாக பூர்ணேஷ் மோடி மற்றும் குஜராத் அரசு தரப்பு விளக்கத்தை கேட்டுள்ளது ஏப்ரல் 10 க்குள் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் அடுத்த விசாரணையை ஏப்ரல் 13 க்கு தள்ளிவைத்து.

மேலும், ஏப்ரல் 13 அன்று நடைபெறும் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு விலக்களித்துள்ளது.