டில்லி

மீண்டும் ராகுல் காந்தி பாதுகாப்புத் துறை நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம் பெற்றுள்ளார்.

ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர்.பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக, பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.  மக்களவை செயலகம் அவரின் தகுதி நீக்கத்தை ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரத்து செய்ததையடுத்து அவர் மீண்டும் எம் ஆனார்.

எனவே பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக மீண்டும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ளார்.

ஓம் பிர்லா,

”பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி, அமா் சிங் ஆகியோரும்  நியமிக்கப்பட்டுள்ளனர். வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, உணவு பதப்படுத்துதல் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் ஆம் ஆத்மி எம்.பி. சுஷீல் குமார் ரிங்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. ஃபைசல் பி.பி.முகமது நியமிக்கப்பட்டுள்ளார்”.

என்று தெரிவித்துள்ளார்.