நெமம்:
ராகுல் காந்தி, கேரளாவில் 6வது நாளாக இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த புதன்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கினார். களியக்காவிளை அருகே உள்ள தலச்சன்விளையில், கடந்த சனிக்கிழமை தமிழக பயணத்தை நிறைவு செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர் 4 நாட்களில் 56 கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளார்.

இன்று காலை 7 மணிக்கு நெமம் முதல் பட்டோம் வரையிலும் யாத்திரை மேற்கொள்ளும் ராகுல், மாலையில் பட்டோம் முதல் கலக்கோட்டம் வரை யாத்திரை மேற்கொள்கிறார். அவர் கேரள மாநிலத்தில் 19 நாட்களில் 450 கிலோமீட்டர் தூரம் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார்.