மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், கலை இயக்குநராக தோட்டா தரணி, எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஒரே ஒரு போஸ்டரை மட்டும் வெளியிட்டுவிட்டு, ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதால், தனியாக போஸ்டர் வெளியிடப்படாமல் இருந்தது. சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்துக்கான போஸ்டரைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். 2022-ம் ஆண்டு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

ரூ. 800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70 சதவீதம் முடிந்துள்ள நிலையில், இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை மத்திய பிரதேசத்தில் நடத்தவுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

அருள்மொழி வர்மன் பாத்திரத்தில் நடித்து வந்த ஜெயம் ரவி மற்றும் விக்ரம் சமீபத்தில் தனது படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.

குவாலியரில் படப்பிடிப்பை முடித்து தற்போது இந்தூரில் படப்பிடிப்பை தொடர்கின்றனர். ரகுமான், பாபு ஆண்டனி உள்ளிட்டவர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர்.

பாபு ஆண்டனி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமியுடன் இருக்கும் புகைப்படத்தை ரகுமான் பகிர்ந்து, ‘ஒரு நல்ல பயணம். என் நெருங்கிய நண்பா, மீண்டும் ஒன்றாக நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. பழைய நினைவுகளை மீண்டும் உற்சாகத்துடன் நினைக்க முடிந்தது. இந்த சரித்திரப் படத்தில் நீயும் இருப்பது மகிழ்ச்சி. உனது வருங்கால திட்டங்களுக்கு எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/rahmanthestar/posts/371179257711221

[youtube-feed feed=1]