ராஞ்சி

மலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரனை ராகுல் காந்தி சந்தித்துள்ளார் .

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட்மாநிலத்தில் முதல்வராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார். கடந்த 31 ஆம் தேதி  நிலமோசடி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 31ம் தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது.

ஜார்க்கண்ட் புதிய முதல்வராக  சம்பாய் சோரன் பதவியேற்றார்.  முதல்வர் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆள்நர் உத்தரவிட்டு இருந்தார். அந்த உத்தரவுப்படி, ஜார்க்கண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் சம்பாய் சோரன் பெரும்பான்மையைக் காட்டினார். ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக 47 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். எனவே சம்பாய் சோரன் நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்றார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எச்.இ.சி. வளாகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாஹீத் மைதானத்தில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட்டின் முன்னாள் முதல்வரின் மனைவி கல்பனா சோரனைச் சந்தித்ததாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.