பாகிஸ்தானை தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என கோரி ஆன்லைனில் கையெழுத்து வேட்டை நடந்து வருகிறது.
அரம்பித்த பத்து நாட்களுக்குள் இதுவரை ஐந்தரை லட்சம்பேர் அதில் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.
sign
இந்த ஆன்லைன் கையெழுத்து வேட்டை அடோபர் 21-ம் தேதிவரை நடைபெறும்.
அதற்குள் பத்து லட்சம் கையெழுத்துகள் எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடங்கியவர் ஒரு அமெரிக்க இந்தியராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆர்.ஜி என்ற இனிஷியலை மட்டுமே அவர் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
பெருவாரியாக மக்கள் கையெழுத்திடும் பட்சத்தில் வெள்ளை மாளிகை இந்த மனுவுக்கு பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.