லண்டன்:
ராணி எலிசபெத் மறைவையொட்டி இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான செய்தியில், மறைந்த ராணி எலிசபெத்தின் உடல் லண்டனுக்கு கொண்டு வரப்பட்டு நான்கு நாட்களுக்கு வெஸ்ட் மினிஸ்ட்டர் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படுகிறது. ராணி எலிசபெத்தின் துக்கம் அனுசரிப்பு பத்து நாட்களுக்கு நடைபெறும். பத்தாவது நாளில் அவர் மரபின்படி வெஸ்மின்ஸ்ட்டர் அபேயில் நல்லடக்கம் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,