சண்டிகர்:

பஞ்சாபின் பிரபல பாப் பாடகர் பர்மிஷ் வர்மா மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகர் பர்மிஷ் வர்மா. இவர் மொஹாலியில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நள்ளிரவு அவர் வீடு திரும்பிய போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் அவரது காலில் குண்டடி பட்டது. அவரது நண்பரும் காயம் அடைந்தார். இருவரும், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் நிழல் உலக தாதா தில்ப்ரீத் சிங் சமூக வலைதளத்தில் இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று பதிவிட்டுள்ளான். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.